27.8 C
Colombo
Saturday, September 21, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

என்னைத் தூக்கிலிட கர்தினால் விரும்புகிறார்- மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் தனக்கு தூக்குதண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் விரும்புகின்றார் என தெரிவித்துள்ளார்.

உயிர்தஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபை பொறுமையை கடைப்பிடிக்க தவறியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்தஞாயிறுதாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் மூலம் இதுவரை உறுதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் உலக நாடுகள் சிலவற்றில் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் நீடித்தன எனவும் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை வேகமாக பூர்த்தி செய்து என்னை சிறைக்கு அல்லது தூக்குமேடைக்கு அனுப்ப கர்தினால் ஆசைப்படுகின்றார் விசாரணைகள் முடிவடையாமலே இந்த குற்றத்தை செய்வதற்கு அவர் விரும்புகின்றார் எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles