ஐக்கிய தேசியக் கட்சியின், மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதிக்கான நிர்வாக சபைக் கூட்டம் நேற்று மாலை குருக்கள்மடத்தில்
அமைந்துள்ள கட்சியின் தொகுதிக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
பட்டிருப்பு தொகுதிக்குரிய அதிகாரமளிக்கப்பட்ட முகவர் சிவலிங்கம் சுதர்சனன் தலைமையில் நடைபெற்ற கூட்டம் நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகளை பட்டிருப்புத் தொகுதியில் மேலும் எவ்வாறு முன்கொண்டு செல்வது, அபிவிருத்தி திட்டங்களை முன்னிறுத்தி திட்ட வரைபுகளை
தலைமைக் காரியாலயத்திற்கு அனுப்புதல், எதிர்வரும் காலத்தில் எந்த தேர்தலாக இருந்தாலும் அதனை எவ்வாறு எதிர்கொள்வது, போன்ற பல விடையங்கள்
இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.