ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் தற்கொலை செய்துகொண்டு மரணித்த சம்பவம் எப்பாவெலவில் பதிவாகியுள்ளது.
எப்பாவெல பகுதியில் நேற்றைய தினம் 24 வயதுடைய இளைஞர் ஒருவர் அவரின் வீட்டில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரின் சகோதரனுடன் ஏற்பட்ட முரண்பாடே தற்கொலைக்கு காரணம் என காவல் துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
எனினும்இ நேற்றைய தினம் தற்கொலை செய்துக்கொண்ட இளைஞரின் சகோதரர்கள் மூவரும் சகோதரி ஒருவரும் இதற்கு முன்னதாகவே தற்கொலை செய்துகொண்டு மரணித்துள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஒரு சகோதரனும் சகோதரியும் தொடருந்தில் பாய்ந்தும், ஏனைய இரு சகோதரர்களில் ஒருவர் தோட்டப்பகுதியிலும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
மற்றையவர் இறுதியாக நேற்றைய தினம் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு சகோதரர்களில் ஐவர் தற்கொலைசெய்துகொண்டு மரணித்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.