கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பி. தாக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது.
எழுத்துமூல முறைப்பாடு கிடைத்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் கூறுகையில்,
இது குறித்து உடனடியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தெரியப்படுத்தியது.
இந்த விடயம் குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம். பியிடம் எழுத்து மூலமாக முறைப்பாடு ஒன்றை இன்று வழங்குமாறும் அவ்வாறு வழங்கிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.