கனேமுல்ல சஞ்சீவ கொலை – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

0
36

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேக நபர்களை மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு குற்றப்பிரிவின் காவலில் இருந்த குறித்த சந்தேக நபர்கள் இன்று (24) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதையடுத்து மூன்று சந்தேக நபர்களையும் வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.