அம்பாறை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய
கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பி.எஸ்.எஸ்.பி திட்டத்தினை சிறப்பாக அமுல்படுத்திய மத்தியமுகாம் மற்றும் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் தகவல் சுகாதார முகாமைத்துவப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரியினால் ஆவணம் மற்றும்
மென் பொருள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது