28 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனையில் மேலும் இருவருக்கு கொரோனா உறுதி

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் உள்ள இறக்காமம் பிரதேசத்தில் மேலும் இரு கொரோனா தொற்றாளர்கள் இன்று

இனங்காணப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இறக்காமம் பகுதியில் இருந்து தொழில் நிமிர்த்தம் கொழும்பில் உள்ள புத்தக கடை ஒன்றில் பணிபுரிந்து மீண்டும் தமது இல்லங்களுக்கு திரும்பியிருந்த நிலையில் இறுதியாக அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உள்ளவரின் தந்தையருக்கும் அவரின் சகோதரருக்கும் கடந்த 4ஆம் திகதி பெறப்பட்ட பி.சி.ஆர் மாதிரிகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகி இருந்தன.

இந்த முடிவின் படி இவ்விருவரும் கொரோனா தொற்று என அடையாளப்படுத்தப்பட்டு இன்று காலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கல்முனைப் பிராந்தியத்தில் இதுவரை மினுவாங்கொடை பேலியகொடை திவுலப்பிட்டிய கொத்தணியில் 20 பேர் கொவிட்19 உள்ளவர்களாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனவே இருவர் அடையாளப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 22 பேர் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles