காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் தலைமையில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

0
201

காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜெயசிறில் தலைமையில் தைப்பொங்கல் பெருவிழா நேற்று பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

நிகழ்வில் கிழக்கு மகாண உள்ளூராட்சி ஆணையாளர் நா.மணிவண்ணன் பிரதம அதிதியாக்க கலந்து கொண்டதுடன்
கௌரவ அதிதியாக அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ.கமல் நெத்மினி, சிறப்பு அதிதியாக அம்பாறை வேலை அத்தியட்சகர் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம் ரி.நளிராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அக்கரைப்பற்று கொழும்பு மருத்துவ பீடத்தில் அதி கூடிய 13 தங்கப்பதக்கங்களை பெற்ற சாதனையாளரான வைத்தியர் தணிகாசலம் தர்ஷிகா உள்ளிட்ட உள்ளூராட்சி உத்தியோகஸ்தர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.