காவல்துறை உத்தியோகத்தர் மீது தாக்குதல் – சந்தேக நபர் தப்பியோட்டம்!

0
61

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் கைது செய்ய சென்ற போது காவல்துறை உத்தியோகத்தர் மீது சந்தேகநபர் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று (18) இடம்பெற்றுள்ளது. குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.

சந்தேகநபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகித்து, காவல்துறை மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சந்தேகநபரை தெல்லிப்பழை காவல்துறை தேடி வருகின்றனர்.