கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

0
92

மொனராகலை மெதகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோட்டபோவ பிரதேசத்திலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கோட்டபோவ பிரதேசத்தை சேர்ந்த 55 வயது நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேதப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.