கிளிநொச்சியில் பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
டெங்கு வருமுன் காப்போம் எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக இன்று டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள அனைத்து திணைக்களங்கள், இராணுவத்தினர், பொதுமக்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுகளை ஒன்றிணைத்து பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கிளிநொச்சி நகர் ஏ-9 வீதியின் இருமருங்கும் உள்ள இடங்கள், இரணைமடு சந்தியில் இருந்து கரடிப்போக்கு சந்தி வரையான பகுதிகளில் குறித்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.