கிளிநொச்சியில், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு

0
148

போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு, கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், இன்று நடைபெற்றது.
இன்று காலை 10.00 மணியளவில், வித்தியாலய மண்டபத்தில், போட்டி இடம்பெற்றதுடன், போதைப்பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு, எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதன் முன்னேற்பாடாக, குறித்த தலைப்பின் கீழ், விழிப்புணர்வு பதாதை தயாரிக்கும் போட்டி இடம்பெற்றதுடன், 75 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியின் நிறைவில், முதல் மூன்று வெற்றியாளர்கள், நடுவர்களால் தெரிவு செய்யப்பட்டனர். இதன் போது, மாணவர்கள் தமக்குள் எழுந்த எண்ணக்கருவை, பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தினர்.