கூரிய ஆயுதத்தால் தாக்குதல் : படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் -சந்தேகத்தில் மாமனார் கைது!

0
79

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தர்மபுரம் – கட்டைக்காடு பிரதான வீதியில் கட்டைக்காடு பகுதியில் நேற்றிரவு கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட நபர் ஒருவர், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

32 வயதான குறித்த நபர் கிளிநொச்சி கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக அவரது மாமனார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார். மது போதையில் சண்டை ஏற்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவ இடத்தில் தடயவியல் பொலிசாரும் விசாரணைகளை மேற்கொண்டதுடன், கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.