27 C
Colombo
Tuesday, April 16, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் மருத்துவமனை மாற்றம்

வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார மருத்துவமனையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் இந்தப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

30 நோயாளர் கட்டில்களைக் கொண்ட கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார மருத்துவமனையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு இன்று முதல் இயங்க ஆரம்பித்துள்ளது என சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதங்கேணி பிரதேச மருத்துவமனை மற்றும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஒரு பகுதி கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

மருதங்கேணி மருத்துவமனையில் 50 நோயாளர் கட்டில்களைக் கொண்டதாக கொரோனா சிகிச்சை நிலையம் கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இயங்கி வருகிறது.
அத்துடன் கோப்பாய் தேசிய கல்வியியற்
கல்லூரி வளாகத்தில் ஒரு பகுதி 350 கொரோனா நோயாளிகளைப் பராமரிக்கும் நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கிருஷ்ணபுரம் பகுதியில் கொரோனா சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.
சுமார் கட்டில்களைக்; கொண்டதாக இந்த சிகிச்சை நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் நான்காவது கொரோனா சிகிச்சை நிலையமாக மாங்குளம் ஆதார மருத்துவமனையின் ஒரு பிரிவு மாற்றப்பட்டுள்ளது.

.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles