மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ-முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஆலய ஆடிப்பூர பால்குட பவனி நேற்று இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு ஸ்ரீ. நிஜோத் குருக்களின் தலைமையில் விநாயர் வழிபாடுகளுடன் ஆரம்பமாகி விசேட கும்ப பூஜைகள் நடைபெற்று மட்டக்களப்பு ஆணைப்பந்தி ஆலயத்தில் இருந்து பிரதான கும்பம் மற்றும் ஆயிரத்துக்கு மேட்பட்ட அடியார்கள் மஞ்சள் நிற கலாச்சார உடை அணிந்து பாற்குடப்பவனியில் கலந்து கொண்டனர்.
பாற்குடப்பவனி மத்திய வீதி ஊடாக திருமலை பிரதான
வீதியூடாக பவணியாக கொத்துக்குளத்து அம்பாள் ஸ்ரீ-முத்துமாரியம்மன் ஆலயத்தை சென்றடைந்தது
இதன்போது மூலமூர்த்தி மற்றும் பாரிபால மூர்த்திகளுக்கு விசேட அபிஷேக பூசைகளும் நடத்தப்பட்டு விசேட பூஜைகள் நடத்தப்பட்டதுடன் வேத,மேள வாத்தியங்கள், நாதங்கள் முழங்கள் அடியார்களின் அரோகரா கோசத்துடன் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.