28 C
Colombo
Monday, March 27, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொரோனா சமூகப் பரவலாகிவிட்டது; அரசு உண்மைகளை மறைக்கின்றது – லக்‌ஷ்மன் கிரியெல்லை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளது என அரசு கூறினாலும் வைரஸ் சமூகப் பரவலாகிவிட்டது. அரசு மட்டுமே இந்த உண்மைகளைத் தொடர்ந்தும் மறைத்துக் கொண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார வேவைகள் பணிப்பாளர் நாயகம் நியமனத்திலும், அரசு ஊழல் செய்துள்ளது என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று மூன்று மணிநேரம் மாத்திரம் சபை அமர்வுகள் இடம்பெற்றன. இதன்போது சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து எதிர்க்கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கிரியெல்ல மேலும் தெரிவித்தவை வருமாறு:

“சுகாதாரப் பணிப்பாளர் நியமன விடயத்தில் அரசு முன்னெடுத்த தெரிவு தவறானதாகும். சுகாதார அமைச்சரின் தனிப்பட்ட தெரிவாகவே இந்த நியமனம் அமைந்துள்ளது. இப்போது நியமிக்கப்பட்டுள்ள சுகாதார பணிப்பாளர், நியமனப் பட்டியலில் பின் வரிசையில் இருந்தவரே. இம்முறை பணிப்பாளர் தெரிவில் கண்டியைச் சேர்ந்த வைத்தியர் ரத்நாயக்கவே தெரிவாகியிருக்கவேண்டும். ஆனால், பட்டியலில் நான்காம், ஐந்தாம் தரவரிசையில் உள்ளவரை நியமித்துள்ளனர்.

எனவே இது அரசின் தேவைக்காக ஊழல் செய்து இவ்வாறான தெரிவுகளை முன்னெடுத்துள்ளமை தெளிவாக வெளிப் படுகின்றது. அதுமட்டுமல்ல சுகாதார அமைச்சர் சபைக்கு வந்த நேரம் தொடக்கம் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவே கூறிக்கொண்டுள்ளார்.

ஆனால், நாட்டில் கொரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறிவிட்டது. அரசாங்கம் மட்டுமே இன்னமும் சமூகப் பரவல் இல்லை என்ற பொய்யை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றது” என்றார்.

Related Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

கச்சத்தீவில் அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை!

கச்சத்தீவு பகுதியில் புனித அந்தோனியார் தேவாலயம் தவிர வேறு எந்த மத வழிபாட்டுத்தலமும் இல்லை என இலங்கை கடற்படையினர் இன்று தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு தீவில் வேறு...

கோட்டாவை தெரிவு செய்து தவறிழைத்ததாக கூறுகிறார் சனத் நிஷாங்க

கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தெரிவு செய்த விடயத்தில் நாங்களும் தவறு செய்தோம், நாட்டு மக்களும் தவறு செய்தார்கள். 2024 ஆம் ஆண்டு நாட்டு மக்கள் கோருபவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்...

பொருளாதார பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டோம் – பந்துல குணவர்தன

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டுவிட்டோம். முதல் தவணை நிதியுதவியின் ஒரு பகுதி அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்க ஒதுக்கப்படும்.

கொழும்பில் இன்று நேர்ந்த பரிதாப மரணம்!

கொழும்பு மாநகர சபையின் தொழிலாளர்கள் இருவர் சேவையில் ஈடுபட்டிருந்த போது, மலசலகூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (27) பிற்பகல் கொழும்பு, கொட்டாஞ்சேனை...

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியில், வைர விழா

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா, சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. வைர விழாவை முன்னிட்டு, இன்று காலை 9.00 மணிக்கு, கல்லூரி மைதானத்தில், மலர் வெளியீடு...