கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரிக்க நடவடிக்கை

0
104
கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் திறனை அதிகரிப்பது குறித்து அமைச்சு பரிசீலித்து வருவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுகத்தின் தற்போதைய கொள்கலன் கையாளும் திறன் 8.5 மில்லியன் ஆகும்.இலங்கை துறைமுக அதிகார சபையின் கிழக்கு கொள்கலன் முனையத்தில் செயற்பாட்டு கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், ECT யின் நிறைவுடன் கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவு 35 மில்லியனாக அதிகரிக்கப்படும் என குறிப்பிட்டார்.ECT செயற்பாட்டு கட்டிடத்தின் நிர்மாணப்பணிகள் மார்ச் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 1300 மீட்டர் முனையம் கட்டப்படும்.ECT இன் செயற்பாடுகள் அரை-தானியங்கி மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு குறைந்தபட்ச எண்ணிக்கையிலான பணியாளர்களை சேர்த்துக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.