சந்நிதியான் ஆச்சிரமத்தால் முன்னெடுக்கப்பட்ட உதவி வழங்கல் செயற்திட்டங்கள்!

0
73

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முத்துஐயன்கட்டு ஜீவநகர் அறநெறிப் பாடசாலையில் கல்விகற்கும் 52 மாணவர்களுக்கு சீருடை துணி வழங்கப்பட்டதுடன், முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு 1 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான மலசலகூடம் ஒன்றும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒட்டுசுட்டான் பரசங்குளத்தில் குடிநீர் கிணறு 3 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியில் சீர்செய்து வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இரு பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்காக தலா 75 ஆயிரம் ரூபா வீதம் நிதி உதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் அச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள், சைவப்புலவர் இ.திருமாறக் குருக்கள், சமூக செயற்பாட்டாளர் இ.தயாபரன், சைவ கலை பண்பாட்டு பேரவை உறுப்பினர்கள், நிர்வாகிகள், சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.