27 C
Colombo
Thursday, April 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னணியினரால் போராட்டம்!

நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திசில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று மதியம் 2 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நாவற்குழி விகாரைக்கு வருகை தரும் பிரதான வீதியில்  முன்னெடுக்கப்பட்டது.

இதன்ப பொழுது தமிழர் தேசத்தில் பௌத்த விகாரை எதற்கு!இனப்படுகொலையாளி சவேந்திர சில்வா  வெளியேறு! நிறுத்த நிறுத்து பௌத்த மயமாக்கலை நிறுத்து! வெளியேறு வெளியேறு இராணுவமே வெளியேறு! நாற்குழி  விகாரை சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பின் அடையாளம்! திட்டமிட்ட  பௌத்த மயமாக்கலை நிறுத்து! நாவற்குழி தமிழர் தேசம் !தமிழர் தேசத்தில் புத்த கோயில் எதற்கு! ஆகிய பதாகங்களை ஏந்திய  வண்ணம் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பொழுது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்  செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய  செல்வராசா கஜேந்திரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி தலைவி வாசுகி சுதாகர் உட்பட்ட பலர் கொண்டிருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles