சாந்தன் துயிலாயம் அங்குரார்ப்பணம்

0
24

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனுக்கு, யாழ்ப்பாணம் – வடமராட்சியில் துயிலாலயம் அமைக்கப்பட்டு, இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சாந்தனின் ஓராண்டு நினைவு நாளான இன்று, எள்ளங்குளம் இந்து மயானத்தில் அவரை புதைத்த இடத்தில், அவரது குடும்பத்தினரால் அமைக்கப்பட்ட துயிலாலயம், தாயாரால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.இந் நிகழ்வில் அவருடன் சிறைவாசம் அனுபவித்த முருகன் உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.