சுதேச ஆயுர்வேத திணைக்களத்தால
வலுவூட்டும் விழிப்புணர்வு

0
168

சுதேச ஆயுர்வேத திணைக்களத்தால் மாவட்டங்கள் தோறும் தேசிய பாரம்பரிய வைத்தியத்துறையை வலுவூட்டும் விழிப்புணர்வு செயலமர்வுகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு அமைவாக அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச பாரம்பரிய ஆயுள்வேத வைத்தியர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கு ஒன்று நேற்று அக்கரைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஸ்-ஷேய்க் மொஹம்மத் அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக திட்டமிடல் பிரதிப்பணிப்பாளர் தமீம் முக்கியமான இச்செயலமர்வில் பிரதேசபாரம்பரிய ஆயுள்வேத வைத்தியர்கள் பங்கு கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஆயுர்வேத திணைக்களத்தின் பணிப்பாளர் தயானந்தன் இச்செயலமர்வின் நோக்கம் தொடர்பாக விரிவாக விளக்கினார்.

பிரதான வளவாளராக கலந்து கொண்ட பொரல்ல ஆயுர்வேத போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்திய நிபுணர் டாக்டர் சிவகுமார் ஆயுர்வேத வைத்தியத்துறை தொடர்பான சட்டம் ஒழுக்க நெறிகள்; பதிவு செய்தல்; ஆயுர்வேத தொழில் நுட்ப மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்ப்பாக விரிவாக விளக்கினார். இதனையடுத்து நாவின்ன ஆயுர்வேத திணைக்களத்தில் பணிபரியும் டாக்டர் லலித் அலவத்துகொட உள்ளூர் வைத்திய ஒழுக்க நெறிகள் மற்றும் ஆயுர்வேத மருத்துவ கவுன்சில்களின்
செயற்பாடுகள் தொடர்பாக விளக்கவுரைகளை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வின்போது திணைக்களத்தின் பணிப்பாளர் தயானந்தன் ஒரு தொகுதி ஆயுர்வேத வைத்தியத்துறை தொடர்பான நூல்களை பிரதேச செயலாளர் அஸ்-ஷேய்க் மொஹம்மத் அன்சாரிடம் கையளித்தார்.