ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி வவுனியாவில் வேட்புமனு தாக்கல்!

0
84

நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி இன்று தாக்கல் செய்தது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்;டது.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலாநாதன், சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன், வட மாகாண முன்னாள் அமைச்சர் கந்தையா சிவநேசன், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் க.விஜிந்தன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் க.துளசி, மற்றும் முன்னாள் போராளி க. யசோதினி, சமூக செயற்பாட்டாளர் மூர்த்தி,
வர்த்தகர் அ.றொயன், ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியி
டுகின்றனர்.