ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைந்து பயணிக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரட்ண தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறைந்தபட்சம் 25 வருடங்களை இலக்காகக் கொண்ட தேசிய வேலைத்திட்டத்துக்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இதுவெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்துக்காகவும் மக்களின் எதிர்காலத்துக்காகவும் ரணில் – சஜித் ஒன்றிணைந்து செல்ல வேண்டும் எனவும் அது நாட்டின் எதிர்காலத்துக்கான தேசிய தேவை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.