ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து மைத்திரி வௌியேறினார்

0
227

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று (17) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வௌியேறியுள்ளார்.

மேலும், அவரை மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.