தடுப்பூசிகளின் 2ம் டோஸை செலுத்திய பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடையும்!- அமைச்சர்

0
273

சினொவெக் மற்றும் சினோபார்ம் தடுப்பூசிகளின் இரண்டாம் டோஸை செலுத்திக் கொண்ட பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி வளர்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதனால் சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸையும் கட்டாயமாக செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சீனாவிடம் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று (06) காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

மேலும், ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.