தடுப்பூசியினை தவற விடாது மக்கள் விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள் என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா தெரிவித்தார்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் தான் தடுப்பூசி பெற்றபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்
தடுப்பூசி என்பது மக்களின் வாழ்க்கையில் ஒரு வரப்பிரசாதம் அதாவது அம்மை போலியோ நோய் போன்ற பல்வேறுபட்ட நோய்களுக்கு தடுப்பூசியினை பெற்றிருக்கின்றோம்
கடந்த வருடம் மார்ச் மாதத்திலிருந்து இந்த கொரோனா என்று சொல்லப்படுகின்ற வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில் அதன் தாக்கமானது உணரப்படுகின்றது
அந்த வைரஸ் நம்மைத் தேடி வராது ஆனால் நாமாகவே அந்த வைரஸை பற்றி கொள்கின்றோம் அதுதான் உண்மை
உலகில் கோடிக்கணக்கில் மக்கள் தமது வாழ்வை இழந்து கொண்டிருக்கின்றார்கள் சிலர் தமது ஆயுளை இழந்துள்ளார்கள் எனவே இது ஒரு பாரிய ஒரு வைரஸ்நோயாக காணப்படுகின்றது
இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனவே இதற்கு தடுப்பூசி தான் ஒரே ஒருவழியாகும் அமெரிக்கா ரஷ்யா இந்தியா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்துள்ளன..
எனினும் யாழ் மாவட்டத்திற்கு சீனா நாட்டினுடைய தயாரிப்பான சைனோபாம் தடுப்பூசியே வழங்கப்பட்டுள்ளது
எமது ஆய்வின் படி அது ஒரு சிறப்பான தடுப்பூசியாகவே காணப்படுகின்றது எனவே யாழ் பல்கலைக்கழகத்திற்கு இந்த தடுப்பூசியை வழங்குமாறு கோரிக்கை விடுத்தன் அடிப்படையில் எமக்கு தடுப்புசி வழங்கப்பட்டுள்ளது
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமையவே வழங்கப்பட்டுள்ளது
விசேட அனுமதி பெற்று தான் தடுப்பூசி வழங்கப்படுகிறதுஇன்று எமது பணியாளர்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 2100 பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசி இன்றிலிருந்து நாளை மாலை வரை வழங்கப்படவுள்ளது
யாழ்ப்பாணம் மாத்திரமல்லாது கிளிநொச்சி வவுனியா மருதனார்மட வளாகங்களில் கடமைபுரியும் பணியாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுகின்றது
யாழ் மாவட்ட பொதுமக்களும் இந்த சந்தர்ப்பத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இந்த தடுப்பூசியை இனிவரும் காலங்களில் பெறுவது மிகவும் கடுமையான விடயமாகும் ஏற்கனவே இந்திய தடுப்பூசி வந்தது எனினும் அது இரண்டாம் கட்டத்திற்குரியது வருகை தரவில்லை
எனவே இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் இது வழங்குவதாயின் பல வருடங்கள் செல்லும் எனினும் யாழ் மாவட்டத்திற்கு அரசாங்கத்தினால் ஒரு தொகுதி தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை யாழ் மாவட்ட மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
இதேவேளை இந்த சைனோபாம் தடுப்பூசி தொடர்பில் பலவிதமான கருத்துருவாக்கம் மக்கள் மத்தியில் காணப்படுகிறது
இளைஞர்கள் தடுப்பூசி போட்டால் இனவிருத்தி பாதிப்பு ஏற்படும் என கூறுகிறார்கள் ஆனால் அவ்வாறு ஒரு சம்பவமே இல்லை ஆனால் மக்கள் மத்தியில் அந்த கருத்துருவாக்கம் உருவாக்கப்படுகின்றது
இளைஞர்கள் அல்லது இளம் பெண்கள் இந்த ஊசியைப் போட்டால் கரு உருவாகாது என்றெல்லாம் கருத்துக்கள் உருவாக்கப்படுகின்றது அந்த விடயத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை
எனினும் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஏன் போட வேண்டாம் என்று கூறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் கூடுதலாக காணப்படும் என்பதனால்தான்ஆனால் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது
எனவே யாழ்ப்பாண மாவட்ட மக்கள் குறித்த தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு எந்தவித தயக்கமும் காட்டாது நீங்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தடுப்பூசிகளை விரைந்து பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்