தமிழ்ப் பொது வேட்பாளரின் தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு

0
85

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் தேர்தல் அறிக்கை இன்று முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள பொது வேட்பாளரின் தேர்தல் பணிமனையில் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பினர், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பலர் பங்கேற்கவுள்ளனர்.