கல்வியினை இலவசமாக வழங்கி சிறந்த கல்விமான்களை சமூகத்தில் உருவாக்கும் வகையில் இலங்கை கல்வி அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கு மட்டக்களப்பு காத்தான்குடியில் இடம்பெற்றது.
இலங்கை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேசமான்ய ஏ.எல்.எம். மீராஸாகிப் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இன்று நடாத்தப்பட்ட கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக உள வள ஆலோசகர் சட்டமாணி எம்.எஸ்.எம். முகைதீன் சாலி உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் இலங்கை கல்வி அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர்கள் என பலரும் பங்கேற்றனர்.
இதன் போது 2020ம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்த மாணவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கொரவிக்கப்பட்டதுடன் இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்கு தேற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கும் நடாத்தப்பட்டது.