அம்பாறை கல்முனையில் நல்லிணக்கத்திற்காக சிவில்,சமூக தலைமைத்துவமிக்க பெண்களை அடையாளப்படுத்தி வலுவூட்டும் நிகழ்வு,சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் இடம்பெற்றது.
சமூகங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த வேலைத்திட்டத்தை,சமாதானமும் சமூகப்பணி நிறுவனமானது நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றதுசிவில் சமூக அங்கத்தவர்கள் என்ற அடிப்படையில், கடந்த காலங்களில் தங்களின் வகிபாகம் எவ்வாறு காணப்பட்டது ?,தற்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம் எவ்வாறு காணப்பட வேண்டும் என்ற விடயமும், கல்முனை பிரதேசத்தில் நல்லிணக்கத்திற்க்கு சவாலாக காணப்படுகின்ற விடயங்களை அடையாளம் கண்டு எவ்வாறு எதிர்காலத்தில் அவற்றிற்கான சமூக முன்னெடுப்புக்கயை மேற்;கொள்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
கல்முனை பிரதேச நல்லிணக்கக்குழு மற்றும் அம்பாரை மாவட்ட நல்லிணக்ககுழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில்,சமாதானமும் சமூகப்பணி நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர்
ராஜேந்திரன்,அரச சார்பாற்ற நிறுவனங்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இர்பான் உட்பட பலரும் கலந்து கொண்டனர் .