தலையில் இரத்த காயத்துடன் நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!

0
213

லுனுவில தெமடபிட்டிய கல்லூரி வாயிலுக்கு அருகில் இன்று காலை நிர்வாண நிலையில் ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் இரத்தக் காயம் காணப்பட்டதாக மாரவில தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சடலம் தரையில் கிடப்பதையும் அதற்கு அருகில் தலைக்கவசம் ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.வென்னப்புவ தும்மலதெனிய பகுதியைச் சேர்ந்த அசேல பெரேரா என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.