திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் தயார்- அமைச்சர் பீரிஸ்

0
189

ஜனாதிபதிக்கு எதிராக பொதுமக்கள் அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்வதற்கு அனுமதிக்கும் மாற்றத்தை 20வது திருத்தத்தின் நகல்வடிவில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் ஜிஎல்பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
குழுநிலை விவாதத்தின் போது இந்த திருத்தத்தை கொண்டுவருவதற்கு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

குழுநிலை விவாதத்தின் போது நாங்கள் இந்த திருதத்தினை கொண்டுவருவதற்கு தயார் என தெரிவித்துள்ள அமைச்சர் தனது ஆட்சிக்காலத்தின் போது ஜனாதிபதி ராஜபக்ச சட்டவிரோதமாக எதனையும் செய்யமாட்டார் என்ற நம்பிக்கை எஙகளுக்குள்ளது என தெரிவித்துள்ளார்..
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் பதவிக்காலத்தின் போது அவர் அடிப்படை உரிமைகளை மீறினார் என எந்தநீதிமன்றமும் தெரிவிக்காது என்பது எங்களுக்கு தெரியும் என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

இரண்டாவது மூன்றாவது நிலை விவாதங்களின் போது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் மேற்கொள்ளுமாறு தெரிவிக்கும் எந்த திருத்தங்களையும் முன்னெடுக்க தயார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.