28 C
Colombo
Saturday, July 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

துமிந்தசில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க கோரிக்கை!

நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் என அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
20வது திருத்தத்திற்கான வாக்களிப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கும் மனுவொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டதாகவும் இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைச்சாத்திடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அந்த வேண்டுகோளிற்கு ஆதரவை வழங்கியுள்ளதுடன் அதில் கைச்சாத்திட்டுள்ளனர்.
இந்த மனு ஜனாதிபதியிடம் சென்றவுடன் துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகிவிடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles