அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது பூசகர் ஒருவர், தீ விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசகர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என்ற 44 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ள நிலையில் தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.