தைப்பொங்கலை முன்னிட்டு, எதிர்வரும் 15 ஆம் திகதி, கைதிகளை, அவர்களது உறவினர்கள் பார்வையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், இந்து சமயத்தை பின்பற்றும் கைதிகளுக்கு, தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளின் கீழ், ஒருவருக்கு ஏற்றளவு உணவுப் பொதிகள் மற்றும் இனிப்புகளை வழங்க, அவர்களது உறவினர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர் என, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.