அம்பாறை சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீடம் நடத்திய ‘நபிகளாரை நேசிப்போம் – மீலாத் விழா’ நிகழ்வுகள் சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி
யூ.எல்.எம். ரிம்ஸானின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீட அதிபர் தலைமையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பிரதி செயலாளர் யூ.எல்.என். {ஹதா உமர் தொகுத்து வழங்கிய சாய்ந்தமருது தஃவா இஸ்லாமிய்யா கலாபீட மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும், நபிகளாரின் வாழ்வு தொடர்பிலான உரைகளும் இடம்பெற்றது. நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
;நிகழ்வில் கௌரவ அதிதியாக சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.மு. ஆபிகா கலந்து கொண்டதுடன்,
சாய்ந்தமருது பிரதேச செயலக நிதி உதவியாளர் எம்.சி.முஹம்மட் மற்றும் ஆசிரியர்கள், சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய உறுப்பினர்கள், மாணவர்கள் எனபலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பல்வேறு போட்டிகளிலும், நிகழ்வுகளிலும், பல்வேறு விடயங்களிலும் தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.