31 C
Colombo
Saturday, April 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

‘நல்லது செய் நீதியைத் தேடு ‘எனும் கருப்பொருளில் கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் சமய சூழலில் வாழும் கிறிஸ்தவர்கள் மத்தியில் சமாதானத்துடன் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து வாழ ‘நல்லது செய் நீதியைத் தேடு ‘ எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு கிறிஸ்தவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,
கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பின் 2023 ஆம் ஆண்டுக்கான வழிபாடு நேற்று மாலை மட்டக்களப்பு தூய அந்திரேயா
ஆலயத்தில் இடம்பெற்றது
கிறிஸ்தவர்கள் மத்தியில் சமாதானத்துடன் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து வாழ 1910 ஆம் ஆண்டு திருப்பணியில்
ஒரு அம்சமாக எடின்பர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் ஒன்றிப்பின் 112 ஆண்டினை நினைவு கூரும்
வகையில் மட்டக்களப்பு மாவட்ட கிறிஸ்த ஒன்றியமாக கத்தோலிக்க திருச்சபை, அங்கிலிக்கன் திருச்சபை,
மெதடிஸ்த திருச்சபை, அமெரிக்கன் சிலோன் மிஷன் திருச்சபை, இரட்சணிய சேனை திருச்சபை மற்றும் ஏனைய திருச்சபைகள் ஒன்றிணைத்து ஒழுங்கு செய்த 2023 ஆம் ஆண்டுக்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாடாக இந்த வழிபாடு இடம்பெற்றது
வழிபாட்டு நிகழ்வில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசெப் பொன்னையா ஆண்டகை உட்பட கிறிஸ்தவ
ஒன்றியத்தின் அருட்பணியாளர்கள் ,அருட்சகோதரிகள் , பொதுநிலையினர் என பலர் கலந்துகொண்டனர்

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles