நல்லூர் சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய திருமஞ்சத் திருவிழா

0
152

வரலாற்றுப் பிரசித்திபெற்ற நல்லூர் வடக்கு சிறீ சந்திர சேகரப்பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா நேற்று பக்தி
பூர்வமாக இடம்பெற்றது.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை இடம்பெற்று விநாயகப் பெருமான் உள் வீதி எழுந்தருளினார்.

அதனைத் தொடர்ந்து வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட திருமஞ்சத்தில் விநாயகப் பெருமான் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமஞ்ச உற்சவத்தில் ஈழத்தின் புகழ் பூத்த நாதஸ்வர தவில் கலைஞர்களின் விசேட கச்சேரியும் இடம்பெற்றது.