நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ அறிவிப்பு!

0
90

நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு இந்த முடிவை எடுத்ததாகவும் இரண்டு பிரதான கட்சிகள் இணைவதே இன்றைய தேவையென்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.