நாடாளுமன்றில் பாலியல் தொந்தரவு: விசாரணைகள் முன்னெடுப்பு

0
103

நாடாளுமன்றத்தின் குழு அறையொன்றிற்குள் இரண்டு தலையணைகளும் ஒரு மெத்தையும் காணப்பட்டமை தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தலையணைகளையும் மெத்தையையும் கொண்டுவந்தது யார் என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

நாடாளுமன்றத்தில் ஊழியர்கள் சிலர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக வெளியான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, குழு அறைகளில் சமீபத்தில் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதேவேளை பாலியல் தொந்தரவு குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பெண் ஊழியர்கள் உட்பட 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை இந்த விசாரணைகளை குழப்புவதற்கு நாடாளுமன்ற அதிகாரிகள் குழுவினர் முயற்சி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.