27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

நாட்டுக்கு நலம் வேண்டி ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பிரதமர் பங்கேற்பு!

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நலம் வேண்டி ஏழு நாட்கள் இடம்பெறும் ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசம் நாராஹேன்பிட அபயராம புராண விகாரையை மையமாகக் கொண்டு நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதை தொடர்ந்து பிரித் உபதேசத்தில் கலந்து கொண்டார்.

கொவிட்-19  தொற்று இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தித்து நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து ஏழு தினங்கள் நாட்டிலுள்ள 200இற்கும் அதிகமான விகாரைகளில் ரதன சூத்ர உபதேசம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாராஹேன்பிட அபயராமாதிபதி, மேல் மாகாண சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வை, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் பௌத்த விவகார திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் மற்றும் மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ள பிற நெருக்கடிகளையும் இல்லாதொழிப்பதற்கு ஆசி வேண்டி இந்த பிரித் உபதேசம் இடம்பெறுகின்றது.

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ரதன சூத்ரய பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பேராசிரியர் வணக்கத்திற்குரிய மல்வானே சந்திரரதன தேரர், வணக்கத்திற்குரிய அதபத்து கந்தே ஆனந்த தேரர், வணக்கத்திற்குரிய வெலம்பிடியாவே ஞானரதன வித்யாலங்கார தேரர், வணக்கத்திற்குரிய மாபலகம புத்தசிறி தேரர் மற்றும் வணக்கத்திற்குரிய கிரிஇப்பன்ஆரே விஜித தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இணைந்து கொண்டிருந்தனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Related Articles

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...

புதிய கல்வி சீர்திருத்தம்?

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல்...

வங்குரோத்து நிலையில் இருந்து மீட்டுள்ளேன் – ஜனாதிபதி

அனைத்து துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்ற பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.பழைய முறைகளை தொடர்வதன்...