சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம், இன்றையதினம் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளுக்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டார்.
அந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்த ஒருவர், நாமல் ராஜபக்ஷவின் பெயரை பயன்படுத்தி, பல இலட்சம் ரூபாய் நிதி மோசடி செய்துள்ளார். வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறியே அவர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.
இந்த நிலையில், கீதநாத் காசிலிங்கம் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் என்ற ரீதியில் விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நிதி மோசடியில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டால் அவரை கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கீதநாத் தெரிவித்தார்.