மட்டக்களப்பு களுதாவளைக் கிராமம் வெற்றிலைச் செய்கைக்குப் பெயர் பெற்ற கிராமமாகும்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் வெற்றிலைகள் நாட்டின் நாலாபாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன.

தற்போது பணயக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற வெற்றிலைகளை விற்பனை செய்யமுடியாத துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் தமது வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

மிகுந்த பொருளாதார கஸ்டங்களுக்கு மத்தியில் பாடுபட்டு செய்த வெற்றிலைகள் வியாபாரிகள் வருகைதராத காரணத்தால் கொடியோடு முற்றிய நிலையிலும், அழுகிய நிலையிலும் காணப்படுப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமது வெற்றிலையை சந்தைப்படுத்துவதற்கு உரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு வெற்றிலைச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
