26.9 C
Colombo
Thursday, December 7, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கோட்டைக்கல்லாறு பொதுநூலகத்தில்
பரிசளிப்பு விழா நிகழ்வு

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொது நூலகமும், வாசகர் வட்டமும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழா நூலகப்பொறுப்பாளர் வினோ ஒழுங்கமைப்பில் வாசகர் வட்டத்தலைவர் அ.புருஷோத்மன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக உபதவிசாளர் ரஞ்சினிகனகராசா, பிரதேச சபை உறுப்பினர் த.சுதாகரன், பிரதேச சபை செயலாளர் ச.அறிவழகன், சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் சீ.குகநேசன், அதிபர் க.செல்வராசா, மோட்டிவேசன் அண்ணாச்சி சமுக நல அமைப்பின் தலைவர் கா.சூசைதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இருந்து அதிதிகள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக பிரதான வீதியூடாக பொதுநூலக விழா மண்டபம் வரை அழைத்துவரப்பட்டனர்.

இங்கு அறிவார்ந்த சமுகத்திற்கான வாசிப்பு எனும் தொனிப்பொருளில் பிரதேச மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற வாசிப்பு, பேச்சு, கட்டுரை ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் மோட்டிவேன் அணணாச்சி சமுக நல அமைப்பின் தலைவர் சூசைதாசனால் 20 ஆயிரம் ரூபா பெறுமதியான நூல்கள்
பொதுநூலகத்திற்கு அன்பளிப்பு செய்யப்ட்டன. மேலும் நீண்டகாலமாக
பொதுநூலகத்திற்கு வருகை தரும் வாசகர் ஒருவர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ட்டார்.

Related Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு சில்லிக்கொடியாறு பகுதியில், இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு கொக்கட்டிசோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் உள்ள வாய்க்காலிலிருந்து இளம் குடும்பஸ்தர்ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த பகுதியை சேர்ந்த 33 வயதுடைய கிருஸ்ணபிள்ளை ரதன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்ட...

காட்டு யானைகளின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தாருங்கள்- மட்டக்களப்பு இலுப்படிச்சேனை மக்கள் ஆர்ப்பாட்டம

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பகுதி மக்கள் காட்டு யானைத் தொல்லைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இன்று இலுப்படிச்சேனைப் பகுதியில் குறித்த ஆர்ப்பாட்டமானது இடம்பெற்றது.இலுப்படிச்சேனை-வேப்பவெட்டுவான் பிரதான...

ஜ.சி.சி சிறந்த வீரர்கள் பட்டியலில் முஹமது ஷமி

சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கெளரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய...

யாழில் தத்திகளின் தாக்கத்தினால் நெற் செய்கை பாதிப்பு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், நெற் செய்கையில், தத்திகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட விவசாய திணைக்கள உதவிப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி தெரிவித்துள்ளார்.

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு

தொல்பொருள் சார்ந்த அமைச்சர், இனவாத செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றார் எனவும், நீதிமன்றத்தை அவமதித்த அமைச்சருக்கு எதிராக, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.