மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் – மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையிலிருந்து இம்முறை பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகியுள்ள மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.முறீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 26 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை அதிபர் எம்.எம்.முகைதீனுக்கான நினைவுச்சின்னமும்
வழங்கப்பட்டது.
சுமார் 60வருடகால வரலாற்றைக்கொண்ட இப்பாடசாலையில் முதல் தடவையாக பெரும் எண்ணிக்கையிலானோர் இம்முறை பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பிரதம அதிதியாக் முன்னாள் இராஜாங்க
அமைச்சர் எம்.எம்.எஸ். அமீர் அலி கலந்து கொண்டதுடன் மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர்
எம்.ஆர்.ஸியா உல் ஹக், பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஜே.ஏ.அல் அமீன், ஏறாவூர் நகர சபையின் செயலாளர் ஹமீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்கள் தொடர்ச்சியான தேடல்கள் மூலமாக ஆங்கிலத்தையும் சிங்கள மொழியையும் கற்றுக்கொண்டால் சுய ஆளுமை அதிகரிக்குமென முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.