அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல பாடசாலைக்கு பின்பகுதியில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவரை களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 07.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஐஸ் போதைப் பொருளுடன் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 1 கிராம் 60 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்ததுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.