பதுளையில் உள்ள நாவலவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு பிரித்தானியா சைவ முன்னேற்றச் சங்கத்தின் அறிவொளி வளையத்தினால,; அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரன்லி சிப் நிறுவனத்தின் தலைவர் யசோதராஜன்
தலைமையில் நடைபெற்றது.
பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் நிரஞ்சன்,இளம் விஞ்ஞானி வினோஜ்குமார் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு பாடசாலைக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். இதன் போது பாடசாலை மாணவர்களது பொங்கல் நிகழ்வும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.