27.6 C
Colombo
Wednesday, December 6, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பி.சி.ஆர். சான்றிதழ் இல்லாத எவரும் மன்னாருக்குள் நுழைய முடியாது – பதில் அரச அதிபர்

பி.சி.ஆர்.பரிசோதனை சான்றிதழ் இல்லாத எவரும் மன்னார் மாவட்டத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவோ, அங்கிருந்து மன்னாருக்கு வரவோ முடியாது என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலின்போது நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று வருகின்ற வாகனப் போக்குவரத்து தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ்; வைத்துள்ள சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு மாத்திரமே இவ்வாறு சென்றுவர முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று முதல் கொழும்பு மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவுள்ளவர்கள் அண்மையிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 13ஆம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ் இல்லாத எவரும் மன்னார் மாவட்டத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவோ, அங்கிருந்து மன்னாருக்கு வரவோ முடியாது.

மன்னாருக்கு யாராவது வருவதாகவிருந்தால் தங்களுடைய இடங்களிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையுடன் வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக் கடூழிச் சிறைத் தண்டனை

மூவரின் உயிரிழப்புக் காரணமான  தனியார் பஸ் சாரதிக்கு 12 வருடக்  கடூழிச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பஸ் ஒன்றை வேகமாகச் செலுத்தி...

நோயாளிகளின் வங்கிக் கணக்கில் திருடப்பட்ட பெருந்தொகைப் பணம்

புற்று நோயாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை திருடி மோசடி செய்யும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) கண்டுபிடித்துள்ளது. புற்று...

தெஹிவளை கட்டிடம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட கைக்குண்டு

தெஹிவளை பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று, இன்றுகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெஹிவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 124, அனகாரிக தர்மபால...

இலங்கைக்கு தபால் மூலம் போதைப்பொருள் அனுப்பும் போக்கு அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் இலங்கைக்கு போதைப்பொருள் அனுப்பப்படுவது அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.எவ்வாறாயினும், வான் மற்றும் கடல் போதைப்பொருள் கடத்தலை அதிகாரிகளால்...

புதிய கல்வி சீர்திருத்தம்?

அனைத்துத் தரங்களுக்கும் புதிய கல்வி சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தும் முன்னோடி வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் எனவும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அனுசரணையாளர்களின் ஆதரவுடன் கல்விக் கட்டமைப்பை முழுமையாக டிஜிட்டல்...