26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பி.சி.ஆர். சான்றிதழ் இல்லாத எவரும் மன்னாருக்குள் நுழைய முடியாது – பதில் அரச அதிபர்

பி.சி.ஆர்.பரிசோதனை சான்றிதழ் இல்லாத எவரும் மன்னார் மாவட்டத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவோ, அங்கிருந்து மன்னாருக்கு வரவோ முடியாது என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர கலந்துரையாடலின்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை அவசர கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளடங்களாக அழைக்கப்பட்ட திணைக்களத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலின்போது நாட்டில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இடங்களுக்குச் சென்று வருகின்ற வாகனப் போக்குவரத்து தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. இதேவேளை, பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சான்றிதழ்; வைத்துள்ள சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு மாத்திரமே இவ்வாறு சென்றுவர முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று முதல் கொழும்பு மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிகளுக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவுள்ளவர்கள் அண்மையிலுள்ள பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அல்லது மாவட்ட மருத்துவ அதிகாரியுடன் தொடர்பு கொண்டு பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் 13ஆம் திகதியிலிருந்து இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது.
பி.சி.ஆர்.பரிசோதனை செய்யப்பட்ட சான்றிதழ் இல்லாத எவரும் மன்னார் மாவட்டத்திலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பகுதிக்குச் சென்று பொருள்களைக் கொள்வனவு செய்யவோ, அங்கிருந்து மன்னாருக்கு வரவோ முடியாது.

மன்னாருக்கு யாராவது வருவதாகவிருந்தால் தங்களுடைய இடங்களிலிருந்து பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கையுடன் வரவேண்டும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...