31 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் அதிகளவு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட காரணம்?

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் கடந்த 4 நாட்களில் 471 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளான நிலையில் அது ஐந்து மடங்கு அதிகரிப்பு என கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார அதிகாரி டொக்டர் ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரின் தற்போதைய கொவிட் 19 நிலைமை தொடர்பில் இன்று (24) காலை தெரண அருண நிகழ்ச்சியில் பங்கேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமையில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

பேலியகொட மீன் விற்பனை நிலையத்தில் வைரஸ் இலகுவில் பரவுவதற்கான குளிரூட்டும் நிலைமை அதிகரித்து காணப்பட்டமையே பிரதான காரணம் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7153 ஆக உயர்வடைந்துள்ளது.

இறுதியாக நேற்று (23) 865 பேர் தொற்றுடன் இனம் காணப்பட்டதை தொடர்ந்தே இவ்வாறு தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

865 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் அது ஒரு நாளில் பதிவான அதிகூடிய தொற்றாளர்கள் எண்ணிக்கையாகும்.

Related Articles

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த...

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி. இப்பகுதியின் ஷெரீப்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...

சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதலில் 15 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த...

13-அடி நீள ராட்சச முதலை; வாயில் மனித உடல்: சுட்டு கொன்ற புளோரிடா அதிகாரிகள்

அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் உள்ளது பினாலஸ் கவுன்டி பகுதி. இப்பகுதியின் ஷெரீப்...

ஆடைத்தொழிற்சாலை விடுதியில் ஐஸ் விற்பனை – ஐவர் கைது

ஹோமாகம, நியந்தகல பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை விடுதிக்குள் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்து கொண்டிருந்த ஐவரை ஹோமாகம பொலிஸார் இன்று (24) அதிகாலை கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட...

மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவு..

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் பழைமை வாய்ந்த கத்தோலிக்க ஆலயமான அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா கூட்டுத் திருப்பலியுடன் கொடியிறக்கப்பட்டு நிறைவுபெற்றது. கடந்த...