பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமா? – சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன்

0
32

வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது சுருங்கியிருப்பதாக அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான அகிலன் கதிர்காமர் தெரிவித்தார். 

இந்த நிலைமை மக்களையே பாதிப்பதாகவும் அகிலன் கதிர்காமர் கூறினார். 

பாதீட்டில் முன்வைக்கப்படும் விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை வருட இறுதியிலேயே தெரிந்து கொள்ள முடியும் என தெரிவித்தார். 

பொருளாதார நெருக்கடியின் மத்தியில் வாகனங்களை இறக்குமதி செய்ய வேண்டுமா என்ற கேள்வி தமக்கு எழுவதாகவும் அகிலன் கதிர்காமர் குறிப்பிட்டார். 

வாகன இறக்குமதியில் அதிகளவு நிதியை செலவிடுவது சிறந்தது அல்ல எனவும் கூறினார்.