மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டுக்காக ஒன்றிணைவோம் – சஜித்

0
17

அனைவரின் உள்ளங்களிலும் துக்கம், கண்ணீர்,வலியின்றி மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்த புத்தாண்டிற்காக ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். பிறந்திருக்கும் தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சிங்கள புத்தாண்டு என்பது சரியான நேரத்தில் துல்லியமாகச் செயல்படுவதைப் பழக்கப்படுத்திய, நன்றி உணர்வை வளர்த்தெடுத்த கலாசார பண்டிகையாகும். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையேயான உறுதியான தொடர்பையும்இ ஒருவருக்கொருவர் இடையேயான உறவுகளின் மதிப்பையும் வெளிப்படுத்தும் இந்தப் பண்டிகை, அனைத்து வேறுபாடுகளையும் மறந்து புதிய மனிதர்களாக முன்னேறுவதற்கான வழிகாட்டுதலை வழங்குகிறது.

இந்த புத்தாண்டில் வழக்கமான சவால்களுடன் புதிய சவால்களும் நம்முன் உள்ளன. அவற்றைச் சரியாக நிர்வகித்து நாட்டையும் மக்களையும் முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்வது நம் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.